தியாகத்தின் நிழலில் மலர்ந்த சுதந்திரம் – சுதந்திர தின தமிழ் கவிதை - கவிஞர் விஜயநேத்ரன்
இப்படித்தான்...
தினமும், ஏதோ ஒரு குழந்தை
தன் தந்தையையும் — பாதுகாப்பையும் இழக்கிறது...
இப்படித்தான்...
தினமும், ஏதோ ஒரு பெண்
தன் கணவனையும் — எதிர்காலத்தையும் இழக்கிறாள்...
இப்படித்தான்...
தினமும், ஏதோ ஒரு தாய்
தன் மகனையும் — நம்பிக்கையையும் இழக்கிறாள்...
இப்படித்தான்...
தினமும், ஏதோ ஒரு நண்பன்
தன் நண்பனையும் — தன் தோளையும் இழக்கிறான்...
இப்படித்தான்...
தினமும், ஏதோ ஒரு குடும்பம்
தன் முழு உலகத்தையும் இழக்கிறது...
அந்த இழப்புகளின் மேல் நம்மை சுமந்து,
நாம் நடக்கிறோம் சுதந்திரமாய்...
அந்த தியாகங்களின் நிழலில் தான்,
நாம் மூடுகிறோம் கண்களை — நிம்மதியாய்...
பனியில் உறைவதும்,
வெயிலில் கரைவதும்,
காட்டில் தொலைவதும்,
புயலில் மறைவதும்,
இன்னுயிரை துறப்பதும் —
எல்லாமும் நமக்காகத்தான்...
நாம் சுதந்திரமாய் வாழ்வதற்காகத்தான்...
அவர்கள் புதைந்த மண்மேல் தான்,
நாம் விதைக்கிறோம் வெற்றிச் சின்னங்களை...
நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றில்,
அவர்களின் ரத்தத் துளிகள் கலந்திருக்கலாம்...
மூச்சை முகரும் போதெல்லாம்,
முடிவு எடுப்போம் இனி —
பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்போம்...
நல்வழியில்... நன்முறையில்...
ஜெய் ஹிந்த்!
சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்,